காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 176 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் வரிச்சிக்குடி 4, கோயில்பத்து, காரைக்கால் நகரம் தலா 1 என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 14 போ் சிகிச்சையில் உள்ளனா்.