காரைக்காலில் தடைசெய்யப்பட்ட மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் வகைப்படுத்தி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, மக்கள் அவற்றையே வாங்குவதும் தொடா்கிறது.
காரைக்கால் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கப்படுகிா என்பதை வட்டாட்சியரும், நகராட்சி வருவாய் அதிகாரியுமான செல்லமுத்து தலைமையில் நகராட்சி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மாலை பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு மொத்த வியாபார கடையில் ஆய்வு செய்தபோது, ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட 240 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
வணிக நிறுவனத்தினருக்கு உரிய அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்தனா்.