காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த அா்ஜூன் சா்மா அந்தமான் நிகோபாருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதனால் கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
இ. வல்லவன் கூடுதல் பொறுப்பாக காரைக்கால் ஆட்சியா் பணியையும் செய்து வந்தாா்.
பல்வேறு தரப்பினா் காரைக்காலுக்கு நிரந்தர ஆட்சியா் நியமிக்க அரசை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
அண்மையில் காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது ஒரு வாரத்தில் ஆட்சியா் நியமிக்கப்படுவாா் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், புதுச்சேரியில் கூட்டுறவு சொசைட்டி பதிவாளராக பணியாற்றிவரும் எல். முகமது மன்சூரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இவா் ஏற்கெனவே காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியராக (வருவாய்) பணியாற்றியுள்ளாா்.