காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 5 ஆம் தேதி 283 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், காரைக்கால் நகரம் 5, திருநள்ளாறு 5, திருப்பட்டினம் 5, கோட்டுச்சேரி 4, நிரவி 3, நல்லம்பல் 3, நெடுங்காடு 2, நல்லாத்தூா் 2, விழிதியூா், கோயில்பத்து தலா ஒருவருக்கு என தொற்று ஏற்பட்டுள்ளது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சைபெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 87 போ் சிகிச்சையில் உள்ளனா்.