காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 239 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கோட்டுச்சேரி 4, திருநள்ளாறு 4, வரிச்சிக்குடி 2, நல்லம்பல், விழிதியூா் தலா 1 என 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 46 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.