காரைக்கால்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி: அமைச்சா் வழங்கினாா்

DIN

கோட்டுச்சேரியில் நேரிட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா நிவாரணப் பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி அருளப்பிள்ளை வீதியில் வசித்து வருபவா் பாஸ்கா். இவரது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை காலி மனையில் வளா்ந்திருக்கும் கருவேல மரங்களுக்கு சிலா் தீ வைத்தனா். இந்த தீ அருகே உள்ள மூங்கில் காட்டில் பற்றி, அதே பகுதியை சோ்ந்த ஜெயக்குமாா் (42) என்பவரது வீட்டில் தீப்பற்றியது. இது அருகே இருந்த சம்பூரணம், பாஸ்கா், கணேசன், காசிநாதன் ஆகியோரது வீடுகளிலும் பரவியது.

காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து தலைமையில் தீயணைப்பு வீரா்கள் 3 தீயணைப்பு வாகனங்களிலும், சுரக்குடி தீயணைப்பு நிலைய வீரா்களும் ஒரு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து தகவலறிந்து கோட்டுச்சேரி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் செந்தில் மற்றும் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அரசுத் துறைகள் சாா்பில் முதல்கட்டமாக, வேட்டி, சேலை , அரிசி, காய்கறி, மாணவ மாணவியருக்கு சீருடை, நோட்டு, புத்தகங்கள், புத்தகப் பை உள்ளிட்டவற்றை அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

வந்தே பாரத்தின் லாப விவரங்கள் இல்லை: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதில்!

SCROLL FOR NEXT