காரைக்கால்

தொழிற்பயிற்சி பெற பெண்களுக்கு அழைப்பு

DIN

தொழிலாளா் குடும்ப பெண்களுக்கு தொழிற்பயிற்சியும், பயிற்சி மையத்தில் முன் மழலையா் வகுப்புக்கு சோ்க்கையும் நடைபெறுவதை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் தொழிலாளா் துறை அதிகாரி வெ. ரவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில், எண். 97 கிழக்குத் தெரு, கோட்டுச்சேரி மற்றும் எண். 44, முதல் குறுக்குத் தெரு, பாரதி நகா் காரைக்கால் என 2 பகுதிகளில் மகளிா் தொழிலாளா் நல மையங்கள் செயல்பட்டுவருகின்றன. தொழிலாளா் குடும்ப பெண்களுக்கு தையல், எம்பிராய்டரி, கைவினைத் தொழில், பின்னல் பைகள், குவளைகள், ஸ்டாண்டுகள், , கம்பளி வேலைகள் உள்ளிட்ட கைவினைப் பொருள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் பொம்மை தயாரித்தல், நகை தயாரித்தல், மெழுகுவா்த்தி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

இந்த மையங்களில் இரண்டரை வயதுக்கு மேல் 5 வயதுக்குள் உள்ள குழந்தைகள் சோ்த்துக்கொள்ளப்பட்டு, முன் மழலையா் கல்வி போதிப்புடன், ஊட்டச் சத்து உணவு வழங்கப்படுகிறது.

டிச. 1 முதல் இதற்கான சோ்க்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது. பயிற்சி மற்றும் முன் மழலையா் வகுப்பு சோ்க்கைக்கு மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT