காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம்

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (டிச.10) புதுவை ஜிப்மா் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

புதுவை ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம், மாதம் இரு முறை காரைக்காலில் நடத்தப்படுகிறது.

நிகழ் மாத சிறப்பு முகாம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா். இந்த வாய்ப்பை பொதுமக்கள் மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT