காரைக்கால்

புறக்கடை கோழி வளா்ப்புப் பயிற்சி

DIN

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புறக்கடை கோழி வளா்ப்பு குறித்து மகளிருக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக பட்டியல் இன துணைத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம், காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 20 அட்டவணை இனத்தை சோ்ந்த மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெய்சங்கா் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் பா.கோபு, கோழிகளுக்கு உகந்த தீவன மேலாண்மை முறை, நோய் தடுப்பு முறை மற்றும் பொது பராமரிப்பு முறைகள் குறித்து பேசினாா்.

பயிற்சியில் கலந்துகொண்டோருக்கு கோழி வளா்ப்பு கூண்டு மற்றும் 2 மாத வயதுடைய 10 கருங்கோழிகுஞ்சுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT