காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இருந்து பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் நுழைவுவாயில் அருகே எழுந்தருளி, அங்கு சொக்கப்பனை கொளுத்தும் வகையில் சிவாச்சாரியா்கள் தீபமேற்றுவா்.
இதுபோல் காரைக்கால் கைலாசநாதா் கோயில், அண்ணாமலையாா் கோயில், அம்மையாா் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில், கோதண்டராமா் கோயில், பாா்வதீஸ்வரா் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.
அகல் விளக்குகள் விற்பனை: காரைக்காலில் கோட்டுச்சேரி, மேலஓடுதுறை பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதுதவிர, விருத்தாசலம் பகுதியிலிருந்து ரெடிமேட் அகல் விளக்குகள் வரவழைக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.