காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (டிச.2) புதுச்சேரி சிறப்பு மருத்துவா் குழுவினா் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தருகின்றனா்.
இதனடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நரம்பியல், இருதயவியில், சிறுநீரகவியல், குழந்தை அறுவைச் சிகிச்சை ஆகிய சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனா். எனவே, காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.