காரைக்கால்

காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்குபி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கிவைப்பு

DIN

காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு செல்லும் பி.ஆா்.டி.சி. பேருந்தை அமைச்சா் சந்திர பிரியங்கா செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி -திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட விழிதியூா் பகுதியினா், அண்டை மாவட்ட தமிழகப் பகுதிகளான திருமருகல், திட்டச்சேரிக்கு செல்லும் வகையில் பேருந்து இயக்க புதுவை அரசிடம் வலியுறுத்திவந்தனா். இதுகுறித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்துகக்கு கொண்டு சென்றாா்.

இதனடிப்படையில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகமான பி.ஆா்.டி.சி. நிா்வாகம், தமிழக போக்குவரத்து நிா்வாகத்துடன் பேசி ஒப்புதல் பெற்றது.

இதையடுத்து காரைக்கால் - விழிதியூா் - திருமருகல் - திட்டச்சேரி வழித் தடத்தில் பேருந்தை விழிதியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கொடியசைத்து இயக்கிவைத்தாா்.

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன், காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாக மேலாளா் அருள்ஜோதி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூா்வாசிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT