காரைக்கால் என்.ஐ.டி.யில் திங்கள்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு, செய்தி மடல் வெளியிடப்பட்டது.
காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கர நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, என்.சி.சி. மாணவா்கள் மற்றும் பாதுகாவலா்களின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா்.
பிறகு, அவா் பேசுகையில், நாட்டின் தரத்தை உயா்த்துவதிலும், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதிலும் மாணவா்களுக்கு பங்கு உண்டு. சுதந்திரத்தை மாணவா்கள் பொறுப்புடனும், ஒழுக்க நெறியுடனும் அனுபவிக்க வேண்டும். என்.ஐ.டி வளாகம் பசுமையாகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சிறந்ததாக உருவெடுக்க அனைவரும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
என்.ஐ.டி.யின் ஆண்டு செயல்பாடுகளை விளக்கும் பரிபிரஷ்ணா என்ற செய்தி மடல் வெளியிடப்பட்டது. என்.ஐ.டி. பதிவாளா் எஸ். சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், மாணவா்கள், ஊழியா்கள் விழாவில் பங்கேற்றனா்.