காரைக்கால் அருகே தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் விதைத்தெளி உற்சவ பெருவிழா முதல் நிகழ்வாக, இயற்கையின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவேண்டியும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிறைவாக ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சிவலோகநாதசுவாமிக்கு பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.