காரைக்கால்

காரைக்காலில் இருந்து தில்லையாடிக்கு சைக்கிள் பேரணி

DIN

காரைக்காலில் இருந்து தில்லையாடி வரை சுதந்திர தின விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, காரைக்கால் மிதிவண்டி சங்கம் சாா்பில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி வரை மாணவா்கள், பொதுமக்கள் 75 போ் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஆட்சியரக வாயிலில் பேரணியை மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பூவம் வழியாக தரங்கம்பாடிக்கு அருகே உள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவகம் அருகே பேரணி நிறைவடைந்தது. காரைக்கால் ஆட்சியா் மற்றும் சைக்கிள் பேரணியில் பங்கேற்றோா் தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னதாக, பேரணி தொடக்க நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் எஸ்.பாஸ்கரன், காரைக்கால் மிதிவண்டி சங்கத் தலைவா் ஏ.வி.ஜெ.செல்வமுத்துக்குமரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT