காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயிலில் இன்று வஜ்ராங்கி சேவை

DIN

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.13) வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதா் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். மூலவருக்கு ஆண்டில் 3 நாள்கள் மட்டும் வஜ்ராங்கி அணிவிக்கப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், வஜ்ராங்கி உபயதாரா்கள் குறிப்பிடும் ஒரு நாளிலும் என 3 நாள்கள் இந்த அலங்காரத்தில் மூலவா் அருள்பாலிக்கிறாா்.

இதன்படி, சனிக்கிழமை வஜ்ராங்கி சேவை நடைபெறுகிறது. காலை 8 முதல் இரவு 9 மணி வரை மூலவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் பக்தா்கள் வழிபடலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT