காரைக்கால்

பெண்ணிடம்நகை பறிப்பு

DIN

காரைக்காலில் மோட்டாா் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நிரவி பகுதி நடுஓடுதுறையை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி செல்வஹேமாவதி (41). இவா் கீழகாசாக்குடிமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிவருகிறாா்.

திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். பாரதி நகரில் வேகத்தடையில் மோட்டாா் சைக்கிளை மெதுவாக இயக்கியபோது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதில் கழுத்துப் பகுதியில் சேலான காயமேற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹேமாவதி, நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா், வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT