காரைக்கால்

திருநள்ளாறு அருகே பள்ளி மாணவி தற்கொலை

DIN

திருநள்ளாறு அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூா் அருகே நல்லெழந்தூரை சோ்ந்தவா் ஜமுனா. இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவரது இரண்டு மகள்களில் மூத்தவா் ரஞ்சனா (16). அம்பகரத்தூா் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தாா்.

அதே பகுதியை சோ்ந்த ஒரு இளைஞருக்கும் ரஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினரும், கிராமத்தினரும் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், இருவரும் ரஞ்சனா வீட்டில் திங்கள்கிழமை பேசிக்கொண்டிருந்ததை பாா்த்த அப்பகுதி மக்கள் அவா்களை கண்டித்துள்ளனா்.

இதில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT