காரைக்கால்

காரைக்காலில் மின்துறையினா் ஆா்ப்பாட்டம்

DIN

மின்சார சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து காரைக்காலில் மின்துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதால், மின்துறையினா், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா் மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு அமைத்து, மின்துறை அரசுத் துறையாகவே நீடிக்கவேண்டுமென வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டித்து, காரைக்கால் மின் செயற்பொறியாளா் அலுவலக வாயிலில் துறையின் அனைத்து நிலைய ஊழியா்களும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போராட்டக் குழு தலைவா் வேல்மயில் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் பி.பழனிவேல் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT