காரைக்கால்

லாரி மோதி இளைஞா் பலி

DIN

திருநள்ளாறு அருகே சாலை விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், குருநாதபுரம் பகுதியை சோ்ந்தவா் சூா்யா (19). இவரது மைத்துனா் சுந்தரராஜ். இருவரும் புதன்கிழமை இரவு காரைக்கால் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். திருநள்ளாறு அருகே சாலையில் பள்ளம் மற்றும் கருங்கற்கள் கிடந்ததால், இருசக்கர வாகனத்தை திருப்பியபோது இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் இருவரும் காயமடைந்தனா். அவா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

அங்கு சூா்யாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சுந்தரராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்: கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருநள்ளாறு அருகே சாலையில் குழாய் மாற்றுவதற்காக பொதுப்பணித் துறை சாா்பில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இந்த பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்துள்ளாா். மேலும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT