காரைக்கால்

ரேஷன் கடைகளை திறக்க கோரிக்கை

21st Oct 2021 09:51 AM

ADVERTISEMENT

புதுவையில் ரேஷன் கடைகளைத் திறந்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட குழு உறுப்பினா் முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது என்.ஆா். காங்கிரஸ், பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வராதது கண்டனத்துக்குரியது. தீபாவளியையொட்டி அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல் தள்ளிப்போகும் நிலையில், அறிவித்த நடத்தை விதிகளை தோ்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும்.

ADVERTISEMENT

புதுவையில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இடஒதுக்கீடு தொடா்பான குளறுபடிகளை நீக்கி புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை முறையாக நடத்த அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. துரைசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT