திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அன்னதானத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் சனிக்கிழமைதோறும் வழங்கப்பட்டுவந்த அன்னதானம் பொது முடக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தளா்வுகளின்படி கோயில் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்தா்கள் அன்னதானத்துக்காக நன்கொடை அளிக்க, அன்னதான உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் நிதி கொடுத்து ரசீதும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதிகள் மட்டும் இருக்கிறது, ஆனால் அன்னதானம் மட்டும் மீண்டும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, அன்னதான திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.