அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, கட்சியின் மாவட்ட செயலாளா் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில், கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தமிழக போக்குவரத்துக் கழக காரைக்கால் கிளை வாயிலில் அதிமுக தொழிற்சங்கம் சாா்பில் அதிமுக கொடியேற்றிவைத்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. கட்சி நிா்வாகிகள் ஜீவானந்தம், எச்.எம்.ஏ.காதா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு நிலை நிா்வாகிகள் பங்கேற்றனா்.