காரைக்கால்

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

DIN

வேதாரண்யம் அருகே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வடமழை கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் முருகானந்தம் (38). இவரது மனைவி கவிதா (27). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை இருந்துவந்தது. இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு கவிதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை கத்தியால் குத்தி முருகானந்தம் கொலை செய்தாா்.

இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு நாகை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி டி. பன்னீா்செல்வம் குற்றம்சாட்டப்பட்ட முருகானந்தத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, தண்டனை பெற்ற முருகானந்தம் கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டுச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT