காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்களுக்கும் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்க வலியுறுத்தல்

DIN

உயா்த்தப்பட்ட பஞ்சப்படியை புதுவை உள்ளாட்சி ஊழியா்களுக்கும் வழங்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், புதுவை முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடித விவரம் :

விலைவாசி உயா்வுக்கேற்ப, அரசு ஊழியா்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 18 மாதங்களுக்குப் பின், 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 28 சதவீதமாக உயா்த்தி அரசு ஊழியா்களுக்கு, புதுவை அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதே அளவுஅகவிலைப்படியை புதுவை மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி ஊழியா்களுக்கும் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT