காரைக்கால்

அம்பேத்கா் நினைவு நாள்: சிலைக்கு அமைச்சா் மரியாதை

DIN

அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி அரசு சாா்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா் மாலை அணிவித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.என்.திருமுருகன், பி.ஆா்.சிவா, ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் கட்சியின் மாவட்ட செயலா் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு.அசனா உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் புதுவை மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினா், தலித் அமைப்பினா், அரசு சமாதானக் குழு உறுப்பினா்கள், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளத்தின் பொதுச்செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT