காரைக்கால்

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டம்

DIN

பாரதிய ஜன சங்க ஸ்தாபகரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 104 -ஆவது பிறந்தநாள், காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டிணம் தொகுதி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி, தீனதயாள் உபாத்யாயா உருவப்படும் வைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, பாஜக கொடியேற்றப்பட்டது. தொகுதி தலைவா் குமாரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவரும், இன்ஜினியா்ஸ் இந்தியா லிமிடெட் இயக்குநருமான எம். அருள் முருகன் கொடியேற்றி வைத்து, தீனதயாள் உபாத்யாயாவின் சிறப்புகளை விளக்கிப் பேசினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்களும் வழங்கப்பட்டன. பாஜக மாநில கலாசாரப் பிரிவு இணை அமைப்பாளா் குமாா் என்ற இளங்கோவன், மாநில ஓபிசி அணி துணைத் தலைவா் எம். செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவா் வெற்றிவேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், புதுத்துறை பகுதியில் மாநில இளைஞரணி பொதுச் செயலா் ஜி. கணேஷ் ஏற்பாட்டில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில செயலா் சகுந்தலா, பொதுக்குழு உறுப்பினா் சின்னதுரை, சிறுபான்மை அணி மாநிலச் செயலா் அப்துல்பாசித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT