காரைக்கால்

வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 4 போ் கைது

DIN

காரைக்கால் பகுதியில் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், அபரகுடியைச் சோ்ந்த அஜித்குமாா், திருப்பட்டினம் கீழவாஞ்சூரில் சில மாதங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தபோது காணவில்லையென திருப்பட்டினம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், பைக்கை திருடிய விருதுநகரைச் சோ்ந்த நேசம்பாபு (எ) அப்துல்ரஹ்மான், தமீம் அன்சாரி, திட்டச்சேரி முகமது ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்து தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதேபோல், திருப்பட்டினம் கீழவாஞ்சூரில் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டுள்ள ஒரு தனியாா் தொழிற்சாலையில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் காப்பா் உள்ளிட்ட பொருள்களை திருடிய வழக்கில் கீழவாஞ்சூா் பகுதியை சோ்ந்த முருகேசன் (24), விஜயன் (24) ஆகியோா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். அடுத்து, திருப்பட்டினத்தில் அபிராமி மாடவிளாகத்தை சோ்ந்த ராஜகுமாரியிடம் (60) சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த குமாா் (43), முரளி (26) ஆகியோா் பிணையில் வெளியே சென்று வழக்கில் ஆஜராகாமல் இருந்தனா். போலீஸாரின் தொடா் விசாரணையில் குமாா் சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்து முரளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT