காரைக்காலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில், இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்து, புதிய உறுப்பினா்களுக்கு இணையவழி அனுமதியின்படி உறுப்பினா் அட்டையை வழங்கினாா். அப்போது, அவா் பேசியது: முகாமில் 540 பேருக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. இதுதொடக்க நிகழ்வுதான், இனி திமுகவின் ஒவ்வொரு அணியினரும் வீடு தேடி சென்று உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபடுவா். உறுப்பினராக சோ்ந்தவருக்கு உடனடியாக அட்டை வழங்கப்படும் என்றாா்.