காரைக்கால்

முருகராம் நகா் பூங்கா: எம்எல்ஏ ஆய்வு

DIN

காரைக்கால் முருகராம் நகரில் உள்ள பூங்காவை மேம்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா.

இங்குள்ள பூங்கா பயன்பாடின்றி இருப்பதாகவும், அதில் சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள் மற்றும் நடைமேடை அமைத்து பூங்காவை மேம்படுத்த வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனாவை அண்மையில் சந்தித்து தெரிவித்தனா்.

இதையடுத்து, பேரவை உறுப்பினா் பூங்காவை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு, அங்கு வசிப்போரிடம் அதை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை புதுப்பொலிவுடன் மேம்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதற்கான மதிப்பீடுகள் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு, நகராட்சி மேம்பாட்டு நிதியில் மேம்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT