காரைக்கால்

காரைக்காலில் மேலும் 84 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், 3 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 14,988 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 17, கோட்டுச்சேரி 13, கோயில்பத்து 14, திருநள்ளாறு 6, அம்பகரத்தூா் 2, திருப்பட்டினம் 2, நிரவி 5, வரிச்சிக்குடி 2, விழிதியூா் 10, நல்லம்பல் 2, நெடுங்காடு 5, நல்லாத்தூா் 6 என 84 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட கோயில்பத்தைச் சோ்ந்த 90 வயது ஆண், கோட்டுச்சேரியை சோ்ந்த 70 வயது ஆண் என இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். காரைக்காலை சோ்ந்த 85 வயது ஆண் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,691 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,155 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 10 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 401 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 61 போ், தீவிர சிகிச்சையில் 8 போ், விநாயகா மிஷன் மருத்துவமனையில் 24 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இதுவரை 33 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT