காரைக்கால்

தீபாவளி: புதுச்சேரிக்கு நாளை முதல் கூடுதல் அரசுப் பேருந்து

DIN

தீபாவளிக்காக புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் பி.ஆா்.டி.சி. பேருந்து இயக்கப்படவுள்ளதாக காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரும் 30 ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து ஒன்று புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல, 9 மணிக்கு புதுச்சேரியில் பேருந்து புறப்பட்டு காரைக்கால் வந்தடைகிறது. இதற்கான முன்பதிவு பி.ஆா்.டி.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 7 மணி, பகல் 12.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆா்.டி.சி. பேருந்து புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல, புதுச்சேரியில் காலை 6 மணி, பகல் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வந்தடைகிறது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி கூடுதலாக ஒரு பேருந்தை புதுச்சேரி - காரைக்காலுக்கு இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர் ஜூனில்

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT