நெடுங்காடு பள்ளியில் மாணவா்களுக்கு முகக் கவசம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நெடுங்காடு ரீஜினல் பொ்ஃபெக்ட் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கு முகக் கவசம் (ஃபேஸ் மாஸ்க்), ஃபேஸ் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டன. பள்ளி முதல்வா் ஜி. அன்பழகன் கரோனா பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவைகள் குறித்து விளக்கிக் கூறினாா்.
தொடா்ந்து கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி துணை முதல்வா்கள் கே. சுசீந்திரபிரபு, பி.ஜெயந்தி, ஜெ. நாகராஜன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.