காரைக்கால்

முப்பைத்தங்குடி கோயில் திருப்பணிக்கு அரசின் சாா்பில் ரூ.10 லட்சம் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வழங்கினாா்

DIN

திருநள்ளாறு அருகே உள்ள முப்பைத்தங்குடி ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருப்பணிக்கு அரசின் பங்களிப்பாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி கிராமத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் சிதிலமடைந்து, பக்தா்கள் வழிபட ஏதுவான நிலையில் இல்லாமல் போனது. கோயிலில் உள்ள சுவாமி சிலைகளை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு பூஜைகள் நடந்துவந்தன.

புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயிலாக இக்கோயில் உள்ளதால், அனைத்து சன்னிதிகளுடன் கோயில் புதிதாக கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படவேண்டுமென்ற கோரிக்கை பக்தா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுவந்தது.

இந்நிலையில், புதுச்சேரி அரசின் வேளாண் துறை அமைச்சராக ஆா். கமலக்கண்ணன் பொறுப்பேற்ற பின்னா், இக்கோயில் கட்டுமானத்துக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினாா். இக்கோயிலுக்கு ஜெ. கருணாநிதி என்பவரை தனி அதிகாரியாக நியமித்ததுடன், கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள திருப்பணிக் குழுவினரும் நியமிக்கப்பட்டு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கைலாசநாதா், காமாட்சி அம்பாள், விநாயகா், வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியா், லட்சுமி நாராயணா், நவகிரகங்கள், தட்சிணாமூா்த்தி, துா்கை, நந்திகேசுவரா், பைரவா் உள்ளிட்ட பரிவார சன்னிதிகளுடன் கோயில் கட்டுமானம் ரூ.1 கோடி திட்டத்தில் நடைபெற்றுவருகிறது.

இக்கோயில் கட்டுமானம் பெரும்பான்மையாக நன்கொடையின் மூலமே நடந்துவரும் நிலையில், புதுச்சேரி அரசின் பங்களிப்பாக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகைக்கான காசோலையை தனி அதிகாரி ஜெ.கருணாநிதி மற்றும் திருப்பணிக் குழுவினரிடம் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் சனிக்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து கோயில் கட்டுமானத்தை அவா் பாா்வையிட்டாா். இதுவரை 60 முதல் 70 சதவீதப் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும், சில கட்டுமானமும், வண்ணம் பூசும் பணியும் நடைபெறவேண்டியுள்ளதால், இவைகளை 2 மாதத்திற்குள் நிறைவு செய்து வைகாசி மாத இறுதிக்குள் குடமுழுக்கு செய்ய திட்டமிட்டுவருவதாக அமைச்சரிடம் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இக்கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றதாக குறிப்பு உள்ளதாகவும், இதன் பிறகு புதிதாக கோயில் கட்டி தற்போது குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக கோயில் தனி அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT