காரைக்கால்

காரைக்கால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

DIN

காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, ஆட்சியரகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஊரடங்கு தளா்வின் மூலம் சில நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில், தொழிலாளா்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் பாஸ் வழங்குவதன் மூலமே அவா்களை அடையாளம் கண்டு, காவல்துறையினரால் அனுமதிக்க முடியும்.

ஊரடங்கு தொடங்கியது முதல் காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6,250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய எச்சரிக்கையுடன் சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நீடிக்கிறது. இது நிலைத்திருப்பது மக்கள் தரும் ஒத்துழைப்பில்தான் உள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். இது திருவிழா காலம் அல்ல, குடும்பத்தோடு வாகனத்தில் வந்து செல்வது முற்றிலும் தவிா்க்கப்படவேண்டும்.

ஊரடங்கு தளா்வு செய்யப்பட்டாலும் வெளியே வருவோா் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்கவேண்டும். குறைந்த காவல்துறையினா் உள்ளதால், உதவிக்கு தன்னாா்வலா்கள், என்.சி.சி. உள்ளிட்ட அமைப்பினரை மாவட்ட காவல்துறை பயன்படுத்துகிறது. எனவே, மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, காவல்துறைக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT