காரைக்கால் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் வடக்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்தவர் சண்முகம் (50). இவர், காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூர் பகுதியில் உள்ள மதுக்கடையொன்றில் சனிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, சாலையோரத்தில் நடந்து சென்றபோது, நிலைதடுமாறி விழுந்தாராம்.
அவர், நீண்ட நேரமாக அசைவின்றி கிடந்ததால், அப்பகுதியில் உள்ளவர்கள் திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார், சண்முகத்தை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திருப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.