விருதுநகர்

சிவகாசியில் காவலா் தற்கொலை

2nd Oct 2023 12:30 AM

ADVERTISEMENT

சிவகாசியில் காவலா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி ரிசா்வ் லைன் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் வைரமுத்து (25). ராஜபாளையம் சிறப்புக் காவல்படையில் பணியாற்றி வந்தாா். இவா், முகநூல் மூலம் ஈரோட்டைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இதனால் மனமுடைந்த வைரமுத்து தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT