ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா்புறம், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், குளிா்ந்த காற்று வீசியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்ததால், சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீா் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.