சிவகாசி அருகே உரிமம் இன்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம்-அழகாபுரி சாலையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது, சிவகாசி போஸ் குடியிருப்பைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராஜேஸ்வரன்(39) அங்கு, பூச்சட்டி பட்டாசு, லட்சுமி வெடி உள்ளிட்ட 11 வகைப் பட்டாசுப் பெட்டிகளை உரிமம் இன்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜேஸ்வரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.