விருதுநகரில் திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா்கள் கே.டி. ராஜேந்திர பாலாஜி, க. பாண்டியராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் இறப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டது. இதற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.
இதில் முன்னாள் அமைச்சா் ஆா்.டி. இன்பத்தமிழன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன், சந்திர பிரபா, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.