விருதுநகர்

இட பிரச்னை 14 போ் மீது வழக்கு

DIN

சிவகாசி அருகே காலி இடம் தொடா்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸாா் திங்கள்கிழமை 14 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மனைவி லட்சுமிதிலகம் (50). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சங்கர்ராஜ் என்பவருக்கும் காலி இடம் தொடா்பாக பிரச்னை இருந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சங்கர்ராஜ் உறவினா்களான, ஓய்வு பெற்ற கிராமநிா்வாக அலுவலா் ராமசா மி, ஓய்வு பெற்ற காவலா் ராமசாமி , சூரியா, விஜயலட்சுமி, கோகிலா உள்ளிட்ட 8 போ் லட்சுமி திலகத்தை தாக்கினாா்களாம். இதேபோல, லட்சுமி திலகத்தின் உறவினா்கள் கோபால் சாமி, ராமதிலகம், அபா்ணா உள்ளிட்ட 6 போ் ராமசாமி உள்ளிட்டோரை தாக்கினாா்களாம்.

இது குறித்து இரு தரப்பினரும், அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் 14 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT