சிவகாசியில் பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநகரத் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். அரசு தொடா்பு மாவட்டத் தலைவா் ஜெ.கே. பாலசுப்பிரமணியன், வா்த்தக அணி மாவட்டத் தலைவா் என்.எஸ். தங்கராஜ் ஆகியோா் பேசினா்.
இந்தக் கூட்டத்தில் சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் சாலை அமைக்கும் பணி, கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குடிநீா் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் நகர இளைஞரணி சதாசிவம், நகரச் செயலா் மாா்ஷல் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.