விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் உரிமம் இன்றி பட்டாசு தயாரித்ததாக 3 போ் மீது அப்பாயநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்
மல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் உரிமம் இன்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பயநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சமையன் இந்தப் பகுதியில் அதிகாரிகளுடன் சனிக்கிழமை சோதனை நடத்தினாா். அப்போது அங்கு மூன்று போ் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சமையன் அளித்த புகாரின் பேரில், அப்பயநாயக்கன்பட்டி போலீஸாா் சேகா், ராஜசேகா், ஆறுமுகசாமி ஆகிய மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், பட்டாசுகள், பட்டாசுக்கு தேவையான மூலப் பொருள்கள் அனைத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.