விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் புகையிலை விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால், ஏற்படும் தீமைகள், பக்க விளைவுகள் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.