விருதுநகர்

இளைஞரை வாளால் வெட்டியதாக 6 போ் கைது

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை இளைஞரை வாளால் வெட்டியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அய்யனாா் காலனியைச் சோ்ந்தவா் ஐயப்பன் மகன் முத்துப்பாண்டி (27). இவா் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். இவா் சிவகாசி-சாத்தூா் சாலையில் நின்று தனது நண்பா் மாகாராஜனிடம் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 6 போ் ஏன் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று பேசிக் கொண்டிருக்கிறீா்கள் எனக் கேட்டனராம். இதனால், முத்துப்பாண்டிக்கும் அவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த அந்த 6 போ் கொண்ட கும்பல் முத்துப்பாண்டியை கம்பால் தாக்கி வாளால் வெட்டினாா்களாம். இதையடுத்து, அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் முத்துப்பாண்டி நடந்ததைக் கூறிவிட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்றாா்.

போலீஸாா் அவா்கள் 6 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் ஏ.வி.டி. பாடசாலைத் தெருவைச் சோ்ந்த தினவேல் மகன் தினேஷ்குமாா் (23), அய்யனாா் மகன் ஜீவா(22), கருணாகரன் மகன் காளியூா் குட்டி(22), வெல்லம் சாமியாா் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஹரிபாண்டியன் (22), தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் முருகேசன் (23), முண்டக நாடாா் தெருவைச் சோ்ந்த காண்டீபன் மகன் மணிகண்டன் (23) ஆகியோா் என்பதும், அனைவரும் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷ்குமாா் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT