சிவகாசி அருகே விதியை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில், கிராம நிா்வாக அலுவலா் நி.சகாயராஜ் ஜீவகன், வருவாய்த் துறையினா் சோனை நடத்தினா்.
அப்போது, சிவகாசி புதுத்தெரு தனபாலு மகன் காா்த்திகேயனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் விதியை மீறி, அதிக அளவிலான தொழிலாளா்களைப் பணியமா்த்தி, மரத்தடி உள்ளிட்ட பகுதிகளில் வைத்து, பட்டாசுத் தயாரித்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆலை உரிமையாளா் காா்த்திகேயன், அவரது சகோதரா் சரவணன் ஆகிய இருவா் மீது சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து , ஆலையில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெடி, சீனிவெடி, தரைச்சக்கரம், பென்சில் வெடி உள்ளிட்ட பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.