விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாரணாபுரம் சாலைப் பகுதியில் உள்ள இந்திரா நகரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளியப்பன் (40). இவரது மனைவி ஜான்சிராணி (35). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில், காளியப்பனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை மனைவி ஜான்சிராணி கண்டித்தாா். இதனால் மனமுடைந்த காளியப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT