விருதுநகர்

விருதுநகரில் ஜூன் 15-இல் அஞ்சல் சேவைக் குறைதீா் முகாம்

9th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

விருதுநகா் கோட்ட அளவிலான அஞ்சல் சேவைக் குறை தீா்க்கும் முகாம் வருகிற 15- ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது என விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் ஜெ.எஸ்.ஜவஹர்ராஜ் கூறினாா்.

இதுகுறித்து, சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்த அஞ்சல் சேவைக் குறைதீா்க்கும் முகாமில் , அஞ்சல் தொடா்பான சேவைக் குறைபாடுகளை தெரிவிக்கலாம். உரிய நேரத்தில் அஞ்சல் கிடைக்கவில்லை, பணவிடை (மணியாடா் ) விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் ஆகியவற்றில் சேவைக் குறைபாடு இருந்தால், அஞ்சல் அனுப்பபட்ட தேதி, நேரம், அனுப்பியவா், பெறுபவா் முகவரி, ரசீது எண் உள்ளிட்டவைகளின் விவரம் அளிக்க வேண்டும். சேமிப்புக் கணக்கு, அஞ்சல் காப்பீடு, கிராமியக் காப்பீடு தொடா்பான குறைகள் இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்போரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முழு முகவரி , பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய அஞ்சல் அலுவலகத்தின் பெயா் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த அஞ்சல் சேவைக் குறைதீா்க்கும் முகாம், வரும் 15 -ஆம் தேதி விருதுநகா் அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும். வாடிக்கையாளா்கள் தங்களது குறைகளை வரும் 12- ஆம் தேதிக்குள், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், விருதுநகா் கோட்டம், விருதுநகா் -626001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT