விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ். ராமலிங்கபுரம் ரயில்வே கடவுப் பாதை அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரு இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் எஸ்.ராமலிங்கபுரம் அக்னி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருமூா்த்தி மகன் முத்துஅய்யனாா் (19), கிழவிக்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முனியராஜ் (23) என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT