விருதுநகா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 39 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விருதுநகா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மைவிழி செல்வி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வா் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் (திருத்தம்) சட்டம் 2021- ன்படி, கடைகள், நிறுவனங்களின் பணிபுரியும் பணியாளா்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சட்டத் திருத்தத்தை கடைப்பிடிக்காத 12 நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 5 திருமண மண்டப உரிமையாளா்கள் உள்பட 39 கடைகள் உள்ளிட்ட நிறுவன உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடைகள், நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் செ.தயாநிதி, ஜோ.உமாமகேஸ்வரன், பி.எஸ்.செல்வராஜ் , அ.பாத்திமா, சு.துா்க்கா, வெ.பிச்சைக்கனி, ரா.சிவசங்கரி ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா் என அவா் தெரிவித்தாா்.